மாற்றத்திற்கான இளைஞோரும் ஆதரவு!


“எழுக தமிழ் எழுக” என வன்னியின் முல்லை மாவட்ட மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு வாழ்த்தி வரவேற்றிருக்கின்றது.

இது தொடர்பில் அது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உருவாகி இன்று மாவட்ட மக்கள் விரும்புகின்ற அமைப்பாக  மாறி நல்லன பல செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்த இளையோர் தம்பணி “எழுக தமிழ்” எழுச்சிபெற தளராத பங்களிப்பை வழங்க ஆதங்கம் கொண்டுள்ளது.

கடந்த 09 இல் கூடிய அமைப்பின்  பொதுச்சபையினர் இம்முடிவை ஒருமனதாக எடுத்துள்ளனர். சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உடனடி விசாரணை நடாத்து, வடக்கு, கிழக்கு இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியேற்று ஆகிய கோசங்களுக்கு உரம் கொடுக்க அனைவரும் வாருங்கள் என அழைப்புவிடுத்துள்ளது.


No comments