முல்லைத்தீவிலும் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்


தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு, நினைவுநாள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2019.09.15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் ரவிரனுடன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரனும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments