தமிழ் சிவில் சமூக அமையமும் ஆதரவு!


தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், 16 201செப்டம்பர் 2019 அன்று நடைபெறவிருக்கும் 'எழுக தமிழ்' பேரணிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது ஆதரவை வழங்குகின்றது.  

எழுக தமிழ் பேரணி இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் தொடர்பில் எமது எதிர்ப்பை காட்டுவதற்கும் நீதிக்கான அவாவை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாலும் அரசியலில் வெகுசன அணிதிரட்டலை சாதித்தியப்படுத்துவதன் முக்கியத்துவம் கருதியும்  நாம் மனப்பூர்வமாக எமது ஆதரவை இம்முயற்சிக்கு அளிக்கின்றோம். 

தேர்தல் அரசியல் தொடர்பிலும் அதில் இயங்கும் தரப்புக்களின் செல்நெறி தொடர்பிலும் தமிழ் மக்கள் மிகவும் சோர்வடைந்து போய் உள்ளனர். மக்கள் பிரதிநித்துவ அரசியலை தாண்டிய ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கத்தையும் நிகழ்ச்சித்திட்டத்தையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நோக்கங்களுக்காகவே தமிழ் சிவில் சமூக அமையம் பேரவையின் உருவாக்கத்தில் பங்கெடுத்தது. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிமாணிப்பதும்  தேர்தல் அரசியல் கடந்து அரசியல் பணி ஆற்றுவதுமே அதனது வரலாற்று வகிபாகமாக இருக்க முடியும். அதற்கு பேரவை தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்தகைய முயற்சிக்கு எமது முழு ஆதரவுண்டு என்பதையும் ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறோம். 

No comments