அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்தவிடம் மீண்டும் விசாரணை?


கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லேட் வசந்த கரன்னாகொடவை மீள விசாரணைக்கு உட்படுத்த சி.ஐ.டி. தீர்மானித்துள்ளது.

மேலும், கொட்டாஞ்சேனை பகுதியில் இரு தமிழர்கள் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்ட விவகாரம் மற்றும் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கிய விவகாரத்தின் பிரதான சாட்சியாளருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பிலும் சி.ஐ.டி. வசந்த கரன்னாகொடவிடம் விசாரணைகளை செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

No comments