யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 நிகழ்வினை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுப்பது குறித்து யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பேரவை தரப்பினருக்கும் இடையே தமிழ் மக்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்
கிழமை மாலை 7.30 மணியளவில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியை வலுவாக மேற்கொள்வதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்றுவரும் தொடர் சந்திப்பாக இன்றைய சந்திப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments