நடைபெற்றுள்ளது எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல்!

எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி ஏற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

பரப்புரை மற்று அணிதிரட்டல் குழு, ஊடகப்பிரிவு, நிதிக்குழு ஆகிய துணைக்குழுகள் உருவாக்கப்பட்டு எழுக தமிழ்-2019 நிகழ்விற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்றிருந்த நான்காவது ஏற்பாட்டுக்குழுக் கூட்டத்தில், இதுவரையான செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

No comments