தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
![]() |
நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீலீபன் அமர்ந்திருந்து உரையாற்றும் போது |
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
![]() |
உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை தீலீபன் சந்தித்தபோது |
முதல் நாள்
ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் . உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சே குவேரா , பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப் பட்டது. தொடர்ந்து கவிதைகள் , உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார் . அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.
![]() |
உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை தீலீபன் சந்தித்தபோது |
Post a Comment