இது ஆலயம் அல்ல பெளத்த பூமி - இனவாதத்தை கொப்பளித்த தேரர்


நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் கேணிப் பகுதியில் மேதாலங்க தேரரின் உடலை எரிப்பதற்கு தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அங்கிருந்த தேரர் ஒருவர் கடும் ஆவேசத்துடன் "நீதிமன்ற உத்தரவு சரி, இலங்கையில் தேரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரியாதா?. இது ஆலயம் இல்லை! இது பௌத்த பூமி" என்று பொலிஸார் முன்னிலையில் இனவாதம் கக்கியுள்ளார்.

மேதாலங்க தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாம் அருகில் கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (23) மதியம் 12 மணிக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்து.

இந்நிலையில் குறித்த நீதிமன்ற தீர்ப்பை மீறி மேதாலங்க தேரரின் உடலை ஆலயக் கேணிப் பகுதியில் தகனம் செய்ய தேரர்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள் முற்சித்தனர். இதனையடுத்து எதிர்ப்பு வெளியிட்ட போதே சட்டத்தரணிகளுடன் முரண்பட்ட தேரர் மேற்கண்டவாறு இனவாதம் பேசியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி ஆலயக் கேணிப் பகுதியில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments