விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுப்பு
உலக இருதய நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று (30) கல்முனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் தொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்த இவ் விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் புகைத்தல் மதுபானம் அருந்துதல் ஆரோக்கியமான உணவு இன்மை மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாமல் போன்ற காரணங்களால் இருதய நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது என்ற விளக்கம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment