பாலித மற்றும் ஐவர் சற்றுமுன் விடுதலை

களுத்துறை - மத்துகமையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவர் விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த அறுவருக்கும் இன்று (16) சற்றுமுன்னர் மத்துகமை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

No comments