குடும்பஸ்தரின் உயிரையெடுத்த விபத்து

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தில் வைத்து குறித்தநபர் வாகன சாரதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய அந்நபர், வாகனத்தின் சில்லில் சிக்குண்டமையினால் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

இந்நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் முரசுமோட்டை, ஐயன்கோவிலடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அல்வின் அனுரா என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

No comments