காணாமல் போன சிறுவர்களுக்காக மன்னாரில் போராட்டத்திற்கு அழைப்பு

சர்வதேச சிறுவர்கள் தினத்தன்று மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் இணைப்பாளர் இமானுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments