காணாமல் போன நிறுவனம் காணாமல் போகவில்லை!

தாமரைக் கோபுரத் திட்டத்துடன் தொடர்புடைய (2 பில்லியன் ரூபாவுடன்) காணாமல் போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கூறப்பட்ட நிறுவனம் காணாமல் போகவில்லை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் அல்த் எனப்படும் குறித்த நிறுவனம் சீனாவில் தமது இடத்தை அறிவித்தல் இன்றி மாற்றிக் கொண்டது என்றும், இலங்கைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்காமல் திட்டத்தில் இருந்தும் விலகியது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. விரைவில் விபரங்கள் வெளிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments