எழுக தமிழுக்காக, முடங்கியது முல்லைத்தீவு
எழுக தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, முல்லைத்தீவில், கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளும் ஆளரவமற்ற நிலையில், வெறிச்சோடிப்போயுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுச்சந்தை வளாகம் என்பனவும் மூடப்பட்டுள்ளன. இதனால் முல்லை நகர்ப் பகுதி ஆளரவமின்றிக் காணப்படுகின்றது.
இதேபோல் முல்லைத்தீவின் முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளும் இவ்வாறே கடைகள் அடைக்கப்பட்டு, சனநடமாட்டங்கள் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment