கனடாவிலும் எழுக தமிழாக எழுந்த தமிழர்கள

தமிழர் தாயகத்தின் பெரும் எழுச்சி நிகழ்வாக இன்று திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற எழுக தமிழுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் எழுகதமிழ் ஆதரவுப் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதன்வரிசையில் கனடாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் கனேடிய தமிழர் அமைப்புகளின் ஆதரவுப் பேரணி இடம்பெற்றுள்ளது. நேற்று இந்த பேரணி இடம்பெற்றது.
மழைக்கும் மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்த இப்பேரணியில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்துள்ளனர்.
முன்னராக நியூசிலாந்திலும் எழுகதமிழுக்கு வலுச்சேர்க்கும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை தாயக எழுகதமிழுக்கு சமாந்தரமமாக, அமெரிக்காவிலும், தமிழ்நாட்டிலும் எழுகதமிழ் இடம்பெற இருகின்றது.
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்றுவதற்கு எழுகதமிழ் ஒரு வாயிலாக அமைய வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.


No comments