எழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு!


எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழ் மண்ணில் இன்று (16) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு ஆதரவாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  நிலையில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments