சிறிசேன அடம்பிடித்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்!


போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை விதிக்க  வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்துக்கு சார்பாக கண்காட்சி ஒன்றில் 95% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் கருத்துக் கணிப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எண்டர் பிரைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.

அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89 சத வீதத்தினர் ஜனாதிபதியின் தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments