பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர் பலி


குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தியகாவ இராணுவ பயிற்சிகளில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இராணுவ வீரர் ஒருவர் சென்ற பரசூட் கடலில் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த சிப்பாய் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

35 வயதுடைய காலி பிரதேசத்தை சேர்ந்த 04 ஆவது கொமாண்டோ படைப்பிரிவில் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

No comments