பயங்கரவாதியின் தலையை புதைக்கும் தீர்மானம் எப்போது?

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்திலிருந்து அகற்றப்பட்ட பயங்கரவாதியின் உடற் பாகங்களை புதைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

பிரதேச அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோருடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

கள்ளியங்காடு இந்து மயானத்தில் இரகசியமாக புதைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்திய பயங்கரவாதி நசார் முகம்மட் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களே தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 

No comments