செட்டிகுளத்தில் திடீர் இராணுவச் சோதனை


வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (19) காலை தொடக்கம் இராணுவத்தினர் கடும் சேதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் சிருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

மெனிக்பாம் சிவானந்தா வீதியை மறித்து வீதித்தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினர் அவ்வீதியால் செல்லும் வாகனங்கள், பொதுமக்களை துருவித் துருவி விசாரணை செய்து வருவதுடன் பொது மக்களின் பொருட்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

செட்டிக்குளம் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கிராமத்தை அண்டிய காட்டுபகுதியில் சிவில் உடையிலும், இராணுவ சீருடையிலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் கடுமையான பாதுகாப்பு பணியில் இடுபட்டுள்ளனர்.

No comments