இந்த அகதிச் சிறுமிக்கு இந்திய அரசு இரக்கம் காட்டுமா?- பால சந்திரன்

இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.

இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

இவர் ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வருகின்றார். அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதையடுத்து அக்டோபர் 21ம் திகதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அதில் பங்குபற்றினால் நிச்சயம் பதக்கம் பெற்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்ப்பார்.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர் அமெரிக்கா செல்வதற்கான இந்திய அரசின் அனுமதியும் கடவுச் சீட்டும் பெற முடியாமல் உள்ளது.

இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.

இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.

இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாக இருந்தால் உடனடியாக குடியுரிமை வழங்கி தமது நாட்டுக்கு பதக்கம் பெறுவார்கள்.

ஆனால் இந்த சிறுமி அகதியாக அதுவும் தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இந்திய அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. தமிழ்நாடு அரசும்கூட அக்கறைகாட்ட மறுக்கிறது.

இச் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வழக்கு போட்டு நீதி பெறவோ எந்த வசதியும் அற்ற ஒரு குடும்பம் ஆகும்.

யாராவது மனிதாபிமானம் உள்ளவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தால் மட்டுமே ஏதும் நடக்கக் கூடும்.

இல்லையேல் ஒரு சிறுமியின் கனவு அகதி என்பதற்காக கருகி விடும் நிலையே இருக்கிறது.

தமிழ்நாட்டில் உணர்வுள்ள தமிழர்கள் யாராவது இச் சிறுமிக்கு இரக்கம் காட்டுவார்களா?

No comments