நிராகரிக்கப்பட்ட 6 ஆயிரத்தை வழங்க அரசு அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் காணாமல் போன இராணுவம், பொலிஸ் குடும்பங்களுக்கும் 6 ஆயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காணாமல் போனமைக்கான சான்றிதழை கொண்டுள்ள படை வீரர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும்.

புதிதாக நிறுவப்பட்ட இழப்பீட்டு அலுவலகம் இழப்பீடு வழங்கும் வரை இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த 6 ஆயிரம் ரூபாக் கொடுப்பனவை பெரும்பான்மையான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments