ஹெரோயினுடன் வசமாக மாட்டிய பிரதேச சபை உறுப்பினர்

ஆனமடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோணிகல பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (12) காலை 11.20 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

700 மில்லி கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொழும்பு பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதான கருவலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினர் தமயந்த விமுக்தி ஏக்கநாயக்க என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

No comments