பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரிக்கு விளக்கமறியல்

புத்தளம் - வெண்ணப்புவ, சீனோர் பகுதியில் காவல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய தேசிய கட்சியின் வெண்ணப்புவ பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி சமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது மூத்த சகோதரியை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு வாகன அனுமதி பத்திரம் மற்றும் வாகன காப்புறுதி பத்திரமின்றி குறித்த பிரதேச சபை உறுப்பினரின் இளைய சகோதரி அதிவேகமாக உந்துருளியில் பயணித்துள்ளார். அப்போது மேற்படி காவல் அதிகாரியினால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவ்விடத்திற்கு விரைந்த பிரதேச சபை உறுப்பினர், அவரது தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோரால் குறித்த காவல் அதிகாரிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

No comments