யாழ்ப்பாணத்தில் மைத்திரி பிசி?


யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஓடி ஓடி மக்கள் சேவையாற்றவுள்ளதாக தெரியவருகின்றது.

பொதுநூலகத்தில் திருக்குறள் விழா,கைதடியில் கூட்டுறவு வங்கி திறப்பு,வடமராட்சியில் துறைமுக அடிக்கல் நாட்டல், அந்தணத்திடல் பகுதியில் நன்னீர் விநியோக திட்டம்,திருநெல்வேலியில் திண்ணையில் நீர் முகாமைத்துவ மாநாடு,பின்னர் பாடசாலை கட்டட திறப்பு,இறுதியாக மாநகரசபை மைதானத்தில் கூட்டமென ஜனாதிபதி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே வழமை போல ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு அங்கயனின் புதிய சுவரொட்டிகள் இப்பகுதிகள் எங்கும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments