அடுத்தமாதம் போர், இதுதான் கடைசி! ஐநாவுக்கு எச்சரிக்கை.

இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் எனவே ஐநா தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில மக்களை விட துடியாய் துடிக்கிறது பாகிஸ்தான். இந்தப் பிரச்னையில் உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்று பாகிஸ்தான் தோற்றது. சீனாவின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல முயன்றும் கடைசியில் மூக்குடைபட்டது.
இதனால் இப்போது இந்தியாவுக்கு எதிராக, மிரட்டல் பாணியை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளது. .

இந்நிலையில்,பாகிஸ்தான் தொடரூந்து அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது, இன்று ஒரு புது மிரட்டலை விடுத்துள்ளார். ராவல்பிண்டியில் ஊடகவியலாளர்களிடம்  பேசிய அவர், இந்திய அரசாங்கத்தால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது.
காஷ்மீர் விடுதலைக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் மூளும். இந்தப் போர், இரு நாடுகளுக்கு இடையேயான கடைசிப் போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

No comments