கோத்தா நம்பிக்கை தருகிறார்? டக்ளஸ்

தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளார் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே எமது ஆழ்மன இலட்சிய அரசியல் விருப்பமாகும்.
அந்த வகையில் எவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆட்சி அதிகாரத்தில் உட்காரப்போகின்ற கோட்டாபய ராஜபக்ச  அவர்களைச் சந்தித்து எது வித அரசியல் பலமும் இன்றி, அந்த அரசியல் பலத்தை எமது மக்கள் இனிவரும் காலத்தில் எமக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு. எமது நல்லிணக்க உறவுகளோடு மட்டும் அவர்களுடன் பரஸ்பரம் உரையாடியிருந்தோம். என்றார்.

No comments