நாட்டு மக்கள் கேட்பது சஜித்தை மட்டும் தானாம்!

இன்றைய சூழலில் நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார். 

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

இந்த சந்தர்பத்தில் உண்மையாக ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர்கள் வினவினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும் என கூறினார். 

No comments