ஜனாதிபதி வேட்பாளருக்கு தேங்காய் உடைப்பு

சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இன்று (26) திருகோணமலை காளி கோயிலுக்கு முன்னால் ஒன்று கூடி நூற்று ஒரு தேங்காய்களை உடைத்து வேண்டுதலில் ஈடுபட்டிருந்தனர்.
சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக வந்து தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனவும் அனைத்து மக்களுக்கும் சகவாழ்வு வழங்க வேண்டும் எனவும் கோரியே இவ்வாறு மத வழிபாட்டில் அவர்கள் ஈடுபட்டனர்.

No comments