சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஒருவர் கைது

திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை நேற்றிரவு (21) கைது செய்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய சந்தேக நபர் சந்தேக நபர் குறித்த சிறுமியை பதினொரு மாதகாலமாக காதலித்துள்ளதாகவும் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரவு வேளையில் சந்தித்து வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments