பெரமுனவின் மாநாட்டில் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி நடைபெற உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை அறிவிக்கும் மாநாட்டிற்கு உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டவர்கள் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments