அரிவாள் வெட்டுத் தாக்குதல்; இருவர் கைது

யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவரை அரிவாள் ஒன்றினால் வெட்டியதாகவும், சாவகச்சேரி மருத்துவமனையின் ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற இரவு விருந்தின் போது ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர்கள் அரிவாள் ஒன்றினால் நபர் ஒருவரை வெட்டியாதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது சந்தேக நபர்கள் இருவரும் பலாத்காரமாக நோயாளர் அறைக்குள் நுழைய முட்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments