வலுக்கின்றது சஜித் ஆதரவு?


ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சியின்  செயற்குழு, நாடாளுமன்ற குழு கூட்டங்களை கூட்டுமாறு கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிலர், ​தங்களது கை​யொப்பமிட்ட கடிதமொன்றை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் கட்சியின் உறுப்பினர்களில் 55 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களாலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments