நல்லூர் கெடுபிடி மேலும் முனைப்பு பெறலாம்?


நல்லூர் கந்தசாமி கோவில் பகுதியினில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாதுகாப்பு கெடுபிடிகளை நியாயப்படுத்தவும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை தொடரவும் அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது.இவ்வகையில்  நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 3 முஸ்லீம் இளைஞர்கள்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (12) இரவு 10 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 3 முஸ்லீம் இளைஞர்கள் யாழ்ப்பாண  பொலிஸாரால்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 முஸ்லீம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில்  பகுதியை சேர்ந்தவர்கள்  எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் வர்த்தக நோக்குடன் அங்கு நடமாடிய இளைஞர்களே சிலர் வழங்கிய தகவல் அடிப்படையில் கைதாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மூவரும் பயணித்த ஆட்டோவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments