வடக்கு ஆளுநரும் மைத்திரியால் அழைப்பு?


மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன ஜனாதிபதி மைத்திரிபாலவின் வேண்டுகோளின் பேரில் இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இராஜினாமா கடிதத்தை கையளித்ததாக மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

மார்ஷல் பெரேரா சமீபத்தில் ஊவா மாகாண ஆளுனர் பதவியில் இருந்து அண்மையில் விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனும் ஜனாதிபதி மைத்திரியால் எதிர்வரும் செவ்வாய் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.

எனினும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை. 

No comments