முன்னாள் நிதி அமைச்சருக்கு வைகோ இரங்கல்!

உடல்நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இந்தியாவின் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லி மறைவு செய்தி அறிந்த மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்,
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய சட்டம், நிதி, செய்தி ஒலிபரப்பு ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சருமான அருண் ஜெட்லி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.
சட்ட வல்லுநர்; ஆங்கிலப் புலமை மிக்கவர்; நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தவர்; அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களிலும், எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆளுமைத் திறம் மிக்கவர்; பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, விரைவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்; எனக்கு நல்ல நண்பர்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

No comments