21வருடத்தின் பின்னர் தூசு தட்டப்படும் டக்ளஸ் கோவை?


களுத்துறை சிறைச்சாலையில் டக்ளஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி மீதான விசாரணை கோவையினை அரசு தூசுதட்டியுள்ளது.

எனினும் கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என தான் கோரியிருப்பதாக டக்ளஸ் தெரிவித்துள்ளாராம்.

1998 ஆம் ஆண்டு ஜுன்மாதம் 30 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் கோரிக்கைக்கு அமைவாக  கைதிகளை பார்வையிடச் சென்றபோது டக்ளஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் எனக்கு 57 இடங்களில் காயமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களுள் 14 வது குற்றவாளி மீதான விசாரணையை மீளவும் விசாரிக்க வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் குறித்த எதிரி உள்ளிட்ட 16 பேர் தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டிருந்த நிலையில் 15 பேர் தப்பிச்சென்றிருந்த போதும் குறித்த குற்றவாளிக்கு வழங்கிய தீர்ப்பில் வழக்கை ஜுரர் சபை முன்னால் விசாரிக்க வேண்டுமா?: இல்லையா? என குற்றச்சாட்டப்பட்டவரை மேல் நீதிமன்ற நீதிபதி கேட்கத் தவறியிருப்பதால் வழக்கு விசாரணையையும் தண்டனையையும் செல்லுபடியற்றதாகவும் அத்துடன் குறித்த சம்பவம் 21 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றதாலும் அது தெர்டர்பான விசாரணையை மீள விசாரணைக்கு அனுப்பாது விடுதலை செய்ய வேண்டும் என குற்றவாளி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது டக்ளஸ் உயிருடன் உள்ளதாலும் இந்த வழக்கை மீள விசாரிப்பது சிறந்ததென குறிப்பிட்டு மீள் விசாரணை செய்வதற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments