மானிப்பாயில் பொலிசார் துப்பாக்கிச்சூடு! இளைஞன் பலி

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
மானிப்பாய் கார்கில்ஸ் பூட் சிற்றிக்கு முன்பாக உள்ள இணுவிலுக்குச் செல்லும் வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments