காணி அளவீடு தொடங்கியது?


வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்போவதான வடக்கு ஆளுநரது அறிவிப்பின் மத்தியில் காணிகளை  இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமாகியது.

இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இன்றும் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்

இதனிடையே காணி அளவீட்டின் போது வலி.வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் மற்றும் மீள்குடியேற்ற குழு தலைவர் சஜீவன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தார்.

No comments