சுட்டு வீழ்த்தியது ஈரான்! மழுப்புகிறது அமெரிக்கா!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற  பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின்  ஆளில்லா கடல் கண்காணிப்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதுகுறித்து உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க  நிறுத்தியதை தொடர்ந்து
இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது , போர் சூழல் ஏற்படும் அபாயமும் தென்படும் வேளையில் இவ்வாறு நிகழ்ந்திருப்பது மேலும் அப்பகுதியில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

No comments