யாழிலும் ஆர்ப்பாட்டம்?


யாழ்ப்பாண நகரில் மாநகரசபை முதல்வர் ஆனோல்ட் மற்றும் முன்னணி முஸ்லீம் வர்த்தகர்கள் கூட்டில் சுவீகரிக்கப்பட்டுள்ள போக்குவரத்து பாதையனை திறக்க வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பொது வீதி ஒன்று நீண்டகாலமாக முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வீதியை மீண்டும் பொதுப்போக்குவரத்திற்கு திறக்குமாறு கோரியே எதிர்வரும் 22ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு போராட்டமொன்றிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதி பெசன் ஹவுஸ் அருகில் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரண்டப்படும் எமது வளங்கள் மற்றும் நிலங்களை பாதுகாப்பதற்காகவும் மீட்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments