உதவ முன்வந்த முன்னாள் முதலமைச்சர்?


புதிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த முன்னை நாள் போராளிகளான மாற்று திறனாளிகள் மற்றும் மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின் போது தமது பிரச்சினைகள் குறித்தும் தமது புதிய வாழ்வு இல்லத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர். இதன்போது புதிய வாழ்வு இல்லத்தில் பெண்; போராளிகளின் பராமரிப்பு பகுதியை அங்குரார்ப்பணம் செய்வதற்காக சி.வி.  விக்னேஸ்வரன் அவர்களை அவர்கள் அழைத்திருந்தனர்.

அவர்களது அழைப்பை ஏற்றுக்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் அவர்களது மறுவாழ்வு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவிகளை மேற்கொள்வதாகவும் போராளிகளிடம் தெரிவித்துள்ளார். 


No comments