சஹரானின் மடிக்கணணியில் காணொளி; இந்தியாவுக்கு பேரிடி!

இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிம்இன் மடிக்கணணி ஒன்று  அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பெற்றியுள்ளனர்.முன்னதாக இலங்கை புலனாய்வு துறைக்கு ஆதரவாக விசாரணை ஆய்வுகளில் இறங்கியுள்ளனர் இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவர் அமைப்பு, இந்த  மடிக்கணணிகளை ஆராய்ந்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மடிக்கணணிகளை உள் சென்று ஆராய்ந்த போது பல்வேறு காணொளி பதிவுகள் மற்றும் தொடர்பாடல் உரையாடல் இருப்பதாக கூறப்படுகிறது, அதில்  ஓரிடத்தில், ‘எனது தியாகம் இந்தியாவிலும் ஐஎஸ் இயக்கத்தை வளர்க்க உதவும்’என்று குறிப்பிட்டுள்ளது இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது, ஏற்கனவே குண்டு வெடிப்பின் பின் சஹரானின்  கூட்டாளிகள் என்றும் ஐஎஸ் அமைப்பு சார்ந்தவர்களும் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கைதுசெய்யப்பட்டுள போதும், இந்த காணொளி அதிகாரிகளின் கண்ணில் பட்டது அதை உறுதிப்படுத்துவது போல இருப்பதாக பாதுகாப்பு தரப்பு கருதுகின்றனர்,

அத்தோடு இந்தியாவில் இரண்டாம் முறையாக மோடி பதவியேற்ற நிலையில் விரைவில் இலங்கை வருவதாக இருந்தது, ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் நாளாந்தம் வெளிவரும் தகவல்கள் அச்சுறுத்தலாக அமைவதால் பயணம் தள்ளிப்போடலாம என்று கூறப்படுகிறது.

No comments