ஈரான் பெரும் தவறு இழைத்துவிட்டது - டிரம்ப்

ஈரான் பெரும் தவறு இழைத்துவிட்டதாக  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஆளில்லா உளவு வானூர்தியை ஈரான் சுட்டு
வீழ்த்திவீழ்த்தியதையடுத்தே டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

எண்ணெய் வர்த்தக, விநியோகப் பாதையான கோர்முஸ் (Hormuz) நீரிணைக்கு அருகில் உளவு வானூர்தி சுட்டு வீழ்தப்பட்டதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.

ஈரானின் ஆகாயவெளிக்குள் அந்த ஆளில்லா வானூர்தி வந்ததையடுத்தே அது சுட்டு வீழ்த்தப்பட்டது என இஸ்லாமியப் புரட்சிப் படை கூறுகிறது.

அமெரிக்கா பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உதவியை நாடவிருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

No comments