வெடி வெடித்து ஒருவர் படுகாயம்
மூலை வெடியைக் கையில் வைத்துப் பரிசோதித்தபோது அது வெடித்தது. அதில் ஒரு கையையும், கண்ணையும் இழந்த நிலையில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று பருத்தித்துறை, கலப்பினவந்தையில் நடந்துள்ளது. பருத்தித்துறை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான யோகராசா ராஜஜோதி (வயது-33) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
கலப்பினவத்தையில் நேற்று நடந்த இறப்பு வீடொன்றில் வெடிகள் கொழுத்தப்பட்டுள்ளன. அப்போது மூல வெடிகளும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட வெடிகளை இணைத்து வெடிக்க வைக்கப்பட்டபோது அதில் ஒன்று வெடிக்கவில்லை.
வெடிக்காத வெடியை எடுத்து ராஜஜோதி பரிசோதித்துள்ளார். அப்போது அது திடீரென வெடித்துள்ளது. அதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று பருத்தித்துறை, கலப்பினவந்தையில் நடந்துள்ளது. பருத்தித்துறை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான யோகராசா ராஜஜோதி (வயது-33) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
கலப்பினவத்தையில் நேற்று நடந்த இறப்பு வீடொன்றில் வெடிகள் கொழுத்தப்பட்டுள்ளன. அப்போது மூல வெடிகளும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட வெடிகளை இணைத்து வெடிக்க வைக்கப்பட்டபோது அதில் ஒன்று வெடிக்கவில்லை.
வெடிக்காத வெடியை எடுத்து ராஜஜோதி பரிசோதித்துள்ளார். அப்போது அது திடீரென வெடித்துள்ளது. அதில் அவர் படுகாயமடைந்தார்.
Post a Comment