மனோவிற்கு தலையாட்டிய மொட்டைகள்




திருகோணமலை கண்னியா வென்னீரூற்று பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டமாட்டோம். என உறுதியளித்திருக்கும் பௌத்த தேரா்கள் தமிழ் பௌத்தா்கள் இருந்தாா்கள் என்ற வரலாற்றை ஒப்பு கொண்டுள்ளனா்.

அமைச்சா் மனோகணேசன் தலமையில் இன்றைய தினம் கன்னியா பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் அதிகாாிகள் குழு விஜயம் செய்து பாா்வையிட்டிருந்தது.

இதன் பின்னா் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலேயே இந்த தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் பேசப்பட்ட விடயங்களாவன,

புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டது.

இது தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பெளத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசனுடன் யோகேஸ்வரன் எம்பி, வேலுகுமார் எம்பி, சுசந்த புச்சிநிலமே எம்பி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார,

கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை தேரர்கள், ஜமமு பிரசார செயலாளர் பரணிதரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

கலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் கன்னியா வெந்நீர் ஊற்று வளவுக்கு சென்று நேரடியாக ஸ்தலத்தை பார்வையிட்டு,

சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். இதன்போது ஸ்ரீதரன் எம்பியும் அமைச்சருடன் இணைந்து கொண்டார். அவ்விடத்தில் அமைந்துள்ள பெளத்த விகாரைக்கும்

அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

No comments