போலிக் கச்சேரி நடத்தி வந்த ஒருவர் கைது


வெல்லவாயவில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அறையொன்றில் போலிக் கச்சேரி நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

63 வயதான இவரிடம் இருந்து அரச கந்தோர் இலச்சினைகள் கொண்ட சீல்கள் , அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை வெல்லவாய பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஏற்கனவே இப்படியான குற்றம் ஒன்றுக்கு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். மணல் அள்ளுவதற்கான அனுமதிப்பத்திரங்களையும் இவர் போலியாக வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments