பேச்சுவார்த்தைக் கதவுகளை மூடியது ஈரான்

ஈரான் மீது அமெரிக்கா விதித்த புதிய பொருளாதாரத் தடைகளால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையையும் ஈரான் நிராகரித்துள்ளது.

இது குறித்து ஈரான் நாட்டின் ஐநா தூதர் மஜித் தாகத்  ரவாஞ்சி ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்:-

ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை முதலில் அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும்பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. 

அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க எந்த வழியும் இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. 

பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்கும்படி கேட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments