ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்ம்! அலை அலையாக வீதியில் மக்கள்!

ஹொங்காங்கிலிருந்து குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹொங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையில் சீனா தேவையின்றி தலையிடுவதாக குற்றம் சாட்டியே மக்கள் அலை அலையாகத் திரட்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசாங்கக் கட்டிடங்களைச் சுற்றியும் முக்கிய சாலைகளை மறித்தும் காவல்துறையினர் மீது கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் தாக்கியும் கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் மக்கள் திரளைக் கலைக்க முற்பட்டனர்.

தலைக் கவசங்கள், முகமூடிகள் என்பவற்றை அணிந்து மக்களும் தங்கது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 72 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 16 வயது தொடக்கம் 66 வயது வரை உள்ளடங்குகின்றனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்காங்கில் தனி சட்டம், தனி ஆட்சி அமலில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.








No comments