எனக்கு மட்டும் ஏன் இப்படி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனனின் வீட்டில் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வன்று யாழ்ப்பாணத்தில் உள்ள  தனது வீட்டிற்குள் 4 இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து
புத்தக அலுமாரியில், உடுபுடைவைகள் வைக்கும் அலுமாரியில் எல்லாம் கிளறி ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்து தனது சிறப்புரிமையை மீறியுள்ளனர் என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களின் பின்னர் நாட்டில்  சோதனை நடவடிக்கைகளில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் எந்தவித சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படாத நிலையில்,
என் வீட்டில் மட்டும் சோதனை நடவடிக்கை செய்து மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயத்தில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments